Description |
சுரேஷ்குமார இந்திரஜித் நாற்பது ஆண்டுக் காலமாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் நாவல் 2019 ஆம் ஆண்டு வெளியானது. 2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய குறுங்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. குறுங்கதைகள் என்ற வடிவத்தைப் படைப்பாற்றலுடன் கையாண்டுள்ளார். மாயங்களும் யதார்த்தங்களும் புனைவுகளும் உள்ள கலைப்படைப்புகளாக இக்குறுங்கதைகள் உள்ளன. |