Description |
கணேஷ் வெங்கட்ராமன் ருபையாத் கவிதைகளை கூடுமானவரை அலங்காரங்களைத் தவிர்த்துவிட்டு கச்சிதமாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முந்தைய மொழிபெயர்ப்புகளின் சாயல் எங்குமே தெரியாதவகையில் இடைச்செருகல்கள் ஏதுமற்ற சொற்சிக்கனத்துடன் உருவாகியுள்ளது இந்த காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல் தொகுப்பு. நவீன கவிதை வாசகன் தனது பங்களிப்பையும் நல்கி, புரிதலின் செறிவார்ந்த தளங்களை உருவாக்கிக்கொள்வதற்கான பூடக மௌனவெளியும் வரிகளுக்கிடையே அழகாகவே அமைந்துள்ளது. - நிஷா மன்சூர் |