Description |
தற்போதைய ட்ரெண்டில் மாயாஜாலமும் அமானுஷ்யமும் கலந்து ஒரு புதினம் எழுத நினைக்கும்போது துணைக்கு வந்தவள் காமரூபவல்லி. ஒரு சின்ன inspiration உருவாக்கிய காமரூபவல்லி, கதை எழுதும் போது 13ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே என்னை பயணிக்கச் செய்தாள். படிப்பவரையும் பயணிக்கச் செய்வாள். அவளும் அவள் சந்திக்கும் பெண்களும் நம்மை ரசிக்கவும் யோசிக்கவும் வைப்பார்கள். காமரூபவல்லி புத்தகத்திலிருந்து வெளியே வந்துவிட மாட்டாளா என்று யாசிக்கவும் வைப்பாள். |