Description |
வரலாற்றைத் தெரிந்துகொள்வது என்பது ஒரு வகையில் நம் இன்றைய வாழ்வை மதிப்பீடு செய்ய எளிய உபாயம். சிலவற்றில் வளர்ந்திருப்போம். சிலவற்றில் தேய்ந்திருப்போம். பரிசீலனைகளும் மறுபரிசீலனைகளும் காலம் தோறும் நிகழ வேண்டியவையே அல்லவா? இந்நூல், இந்திய வரலாறு தொடங்கி, சைவ ஆதீனங்களின் வரலாறு வரை பேசுகிறது. வங்கிகளின் வரலாறு தொடங்கி வளமை குன்றா சிங்கப்பூரின் வரலாறு வரை விவரிக்கிறது. நீர் மேலாண்மை, நாணய இயல், இதழியல், மாற்று மருத்துவம், உணவு, இசை என்று நம் அன்றாடங்களுடன் தொடர்புகொண்ட ஒவ்வொன்றையும் அடிவேர் வரை சென்று ஆராய்கிறது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு தீரா விருந்து. |