Description |
மேதைகளின் குரல்கள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குனர்கள் அனைவரிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காண முடிகிறது. இவர்கள் அனைவரும் தான் வாழும் சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் திரைக்கதையை அமைப்பதில் தொடங்கி, அப்படைப்பை உலகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவது வரையிலும் படைப்புத் தன்மையின் மீது தீவிரப்பற்று கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எனது தலைமுறைக்கு இது மிகவும் அவசியமான ஒன்று. |