Description |
மரங்களே இல்லாத காட்டில், எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் பழங்கள் கிடைக்கும் மர்மம் என்னவென்று தெரியாமல் விலங்குகள் விழிக்கின்றன. பக்கத்துத் தீவின் இளவரசன், முடிவு தெரியாத மாயத்தூக்கத்தில் ஆழ்ந்து, காட்டில் எங்கோ கிடக்கிறான். குட்டிக்குரங்கு டோஜி செய்த ஒரு குறும்புக்காக, காட்டின் மிகப் பயங்கர தண்டனை அதற்குக் கிடைக்கிறது. மர்மம் விலகியதா? இளவரசன் கிடைத்தானா? மாயத்தூக்கத்திலிருந்து விழித்தானா? காட்டில் மரங்கள் முளைத்தனவா? குட்டிக்குரங்கின் கதி என்னவானது? |