Description |
சிறார் இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில், ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது. KIDS TAMIL STORIES என்ற சிறார் குழுமத்தில் உறுப்பினராக இருக்கும் பிள்ளைகள் (ஆறு வயது முதல் பத்தொன்பது வயது வரை) சிறப்பாக எழுதியுள்ள முப்பத்தி நான்கு கதைகளை டிஸ்கவரி பதிப்பகம் வெளியிடுகிறது. பெரும்பாலான கதைகளுக்கு, அந்தக் கதைகளை எழுதிய குழந்தைகளே படங்களையும் வரைந்திருக்கிறார்கள். சிறார் இலக்கியத்தில் குழந்தைகளே படைப்பாளிகளாக உருவெடுப்பதன் சுவையை உணர வேண்டுமா? இந்தப் புத்தகத்தை விரித்து, சிறார் படைப்புலகினுள் நுழைந்து பாருங்கள். |