Description |
சமீப காலமாக சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துவரும் பாலஸ்தீனத் திரைப்படங்களின் தரமும் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றன. ஐ.நா. சபையினால் இன்னமும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாத நிலையில், “பாலஸ்தீனத்திரைப்படம்” என்கிற பெயர்தாங்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் அவர்களின் திரைப்படங்கள் நுழையமுடிகின்றது. வலிமிகுந்த அவர்களின் வரலாற்றினை, வாழ்க்கையினை திரைப்படங்களின் ஊடாக உலகமக்களாகிய நமக்குச் சொல்லிவருகிறார்கள். பாலஸ்தீனர்களின் சமகால வரலாற்றையும் துயரங்களையும் உலகிற்குச் சொல்லிவிடவேண்டும் என்று திரைப்படங்களை உருவாக்கிய காரணத்திற்காகவே, சில கலைஞர்கள் உயிரையும் இழந்திருக்கின்றனர். சில பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியத் திரைப்படங்களை துணைக்கு வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நூல்தான் இது. |