Description |
அதோ அந்தப் பறவை போல நாம் என்ன செய்யலாம்? தேன்சிட்டுக்கு என்னாச்சி? தங்கப் பதக்கம் பெற்ற மக்வா எப்படி இருக்கும்! புயல்களின் உரையாடலைக் கேட்கலாமா? கனவகம் களைகட்ட என்ன காரணம்? அப்பு குடித்த தண்ணீர் எங்கிருந்து வந்தது? குழந்தைகளா இத்தனைக்குமான விடையை எங்கு தேட வேண்டாம். இந்த நூலிலேயே உள்ளது. படித்தால் தெரியும். குழந்தைகளின் இன்பமே எனது இன்பம் அவர்களுக்குத் தொண்டாற்றுவதே எனது குறிக்கோள்” என தன் வாழ்வை அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள். சிறந்த தமிழாசிரியராக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தம் இல்லத்தில் தொடர்ந்து கவிமணி சங்கத்தை நடத்தி வருபவர். தமிழ்ப் பணிக்காகத் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர். குழந்தைகளுக்காக 18 நூல்களை எழுதிப் பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். சாகித்திய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். |