Description |
‘தமிழில் புதிய சிந்தனைப்போக்கிற்கான தேடல் அதிகரித்திருக்கிற காலம் இது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று தகவல்கள் கணந்தோறும் பறந்து, உதிர்ந்து விழுகின்றன. இந்நிலையில் நாம் அந்த உதிர்த்தலோடு நிதானமாக பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பொதுவாக ஆய்வில் நிதானமும், கவனமும், விரிவும், ஆழமும் தேவை. அதனை நோக்கியே என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. குறிப்பாக கீழைத்தேய ஆய்வுகள் குறித்த இந்த நூல் அதன் ஒரு பகுதி.’ என்று கூறும் எச். பீர் முகமது புகழ்பெற்ற கீழைத்தேய சிந்தனையாளரான எட்வர்ட் செய்த்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல். |