Description |
தீவிரமான சிறுபத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்த எழுபதுகளில் தொடங்கி இன்றைய இணைய இதழ்களின் காலம் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் சுரேஷ்குமார இந்திரஜித். வெவ்வேறு காலகட்டங்களில் அவர் அளித்த ஆறு நேர்காணல்கள் இந்நூலில் உள்ளன. தமிழ்ச் சமூகத்தின் போக்குகள் பற்றிய அவதானிப்புகளுடன் கர்னாடக இசை சார்ந்த பார்வைகளும் இந்த நேர்காணல்களில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, படைப்புகளைப்பற்றி நிகழ்த்தப்பட்ட ஆழமான உரையாடல்கள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகத்தை அணுகவும் புரிந்துகொள்ளவும் ஒரு திறப்பாக அமையக்கூடும். |