Description |
மத்திய அரசு இப்போது கொண்டுவந்துள்ள நிதிச்சட்ட முன்வடிவு, நிதி அடாவடித்தனம் என்று கடுமையாகச் சாடுகிறார் சீத்தாராம் யெச்சூரி. 189 திருத்தங்கள் கொண்ட இதில் உள்ள வரிவிதிப்பு முன்மொழிவுகள் முன்னெப்போதும் இல்லாதவை; அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானவை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்க கொல்லைப்புற வழியை பிஜேபி அரசு பயன்படுத்துகிறது என்கிறார் யெச்சூரி. அவர் பேசத் தொடங்கும் போதே அவையை விட்டு வெளியேறும் அமைச்சர், நாடாளுமன்ற ஜனநாயகத்தை எப்படி மதிப்பார்? ஆதார் அட்டை பெற நிர்ப்பந்தம், தீர்ப்பாயங்களை அழிக்கும் திருத்த மசோதா – அடுத்தடுத்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக முழங்குகிறார் யெச்சூரி. |