Description |
ஒரு பெரிய செல்வந்தனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். மூத்த மகள் மிக அழகாக இருந்தாள். இளைய மகள் அழகற்ற அருவறுப்பான முகத்தோற்றத்தைப் பெற்றிருந்தாள். மூத்த மகளுக்கு, தான் மிகவும் அழகாக இருப்பதில் அளவற்ற செருக்கு உண்டு. தன்னைவிட உலகத்தில் சிறந்த அழகியே கிடையாது என்று எந்தப் பெண்ணிடமும் கர்வமாகப் பேசுவாள். தன் தங்கை அழகற்றவள் என்பதற்காக எப்போதும் கோபமாக அவள் மனம் நோகும் விதத்தில் இடித்துரைத்துக் கொண்டே இருப்பாள். ஒருநாள் செல்வந்தர் வீட்டுக்குத் துறவி ஒருவர் வந்தார். செல்வந்தர் அவரைத் தகுந்த விதத்தில் உபசாரம் செய்தார். துறவியை, செல்வந்தரின் இரண்டு மகள்களும் பணிந்து அவருடைய ஆசீர்வாதத்தைக் கோரினர். பெண்கள் இருவரையும் ஆசீர்வதித்த தறவி இளைய மகள் சோகமே வடிவாய் இருப்பதைக் கண்டு “குழந்தாய், ஏன் கலக்கத்துடன் இருக் கிறாய்?" என்று கேட்டார். அவர் கேள்விக்கு மூத்த மகள் பதில் சொன்னாள். |