Description |
ஒற்றை ஆளாய் மேடையில் நின்று... கதையில் வந்த அத்தனைக் கதாபாத்திரத்தின் வசனத்தையும் தானே பேசி... ஒவ்வொருவருக்கான பாவனையையும் தனித்தனியாய் அடுத்தடுத்து வெளிப்படுத்தி... அம்மேடையையே ஆண்டவனை... வியப்பு கூறாமல்... பிளந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்த சாருகேசன்... கடகடவென ஒலித்த கரகோஷத்தின் சத்தத்தில் தன்னிலை அடைந்து சாருமதியை நோக்கினார். ஹரி எழுந்து நின்று விசில் அடித்துக் கொண்டிருக்க... அவனுக்கு அருகில் நின்று உற்சாகமாய்க் கை தட்டிக் கொண்டிருந்தாள் அவள்... |