|
அவள் ஆசைப்பட்ட விஷயம்... இன்று கருவாகத் தன் வயிற்றில் உதித்திருப்பதை, உருவாகி இருப்பதை உணர்ந்து கொண்டாள். அவள் படுக்கையில் அமர்ந்திருந்ததைப் பார்த்தவன், வேகமாக அவள் அருகே வந்தான்.
“ஏன் பொம்மை, என்ன ஆச்சு...?" அவன் பதட்டமானான்.
அவன் கரத்தைத் தன் வயிற்றில் வைத்து அழுத்தியவள், “நீங்க அப்பா ஆகப் போறீங்கன்னு நினைக்கறேன்...” அவள் சொல்ல, அவன் கண்களிலோ கண்ணீர்.
"கேசவ்...” அவன் அழுகையைக் கண்டு அவள் பதற,
“நானே இந்த உலகத்தில் பிறந்தது வேஸ்ட்னு நினைத்திருக்கேன். இப்போ... எனக்குன்னு ஒரு குடும்பம்... குழ...ந்தை... நிஜமாவே நான் ஏதோ ஜென்மத்தில் கொஞ்சமாப் புண்ணியம் செய்திருக்கேன்.' அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான்.
“கேசவ்... உங்க பேரப்பிள்ளை வர்ற வரைக்கும் நீங்க இந்தப் பேச்சை விடவே மாட்டீங்களா?” கேட்டவள், அவன் கண்ணீரைத் துடைத்து விட்டாள்... |