|
"ஏய், அவங்களைத் தூங்கப் போகச் சொல்ல லையா? உன் பாட்டுக்கு இருக்க?" மனைவியிடம் இதையே கேட்டுக் கொண்டிருந்தார். “அவங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியும், நீங்க முதல்ல படுத்துத் தூங்குங்க.” சொன்னவர், பாலைச் சூடாக்கி அங்கிருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, மகளை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்று விட்டார். “மாமா, எனக்குத் தூக்கம் வருது.” அவள் சொல்ல, அப்பொழுதாவது அவன் அசைவான் எனப் பார்த்தால், அதற்கும் அவன் அசைந்து கொடுக்கவே இல்லை. “இன்னைக்குத் தூங்கவே இல்லன்னாலும் பரவா யில்லை , உக்கார்.” அவன் பிடிவாதம் பிடிக்க, அவனை முறைத்தாள். “ரொம்பப் பண்ணாதீங்க மாமா. இப்போ நீங்க வரல... நஷ்டம் எனக்கில்லை , உங்களுக்குத்தான்." அவள் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, அதற்கு மேலே அவன் அங்கே இருப்பானா என்ன? மாமனார், மருமகனுக்கு இடையில் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டமும், இழுபறியும் தொடருமா? இல்லையென்றால் முடிவுக்கு வருமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். |