Description |
|
மகள்களின் கண்கள் நமது வெப்பத்தைப் போக்குவது. மகள்களின் கைகள் நமது பசியைப் போக்குவது. அவர்கள் உள்ளங்கைகளை விரித்தால் அதில் மழை பொழிகிறது. அவர்கள் சிறுகரம் அள்ளிக் கொடுத்தால் விதைகள் இந்நிலத்தைப் பசுமையாக்குகின்றன. அவர்கள் விழி திறந்தால் பௌர்ணமி இல்லத்தை ஒளியூட்டுகிறது. அவர்கள் உருட்டினால் தாயம் விழுகிறது! |