Description |
சலனப்படத்தில் இடைவெட்டாய் உறைந்து நிற்கும் ஒரு காட்சியின்மேல் மெதுவாக அர்த்தங்கள் திரள்வது போல ஏகாந்தப் பின்னணியில் சிற்சில வரிகளால் அமைந்த இத்தொகுப்பின் கவிதைகள் பெரும் அனுபவங்களைக் கிளர்த்துகின்றன. தொகுப்பு முழுக்கக் காணும், கூர்மைபெறுவதன் எதிர்நிலையில் ஆழம்கொண்டு வெளிப்படும் மொழியின் அடர்ந்த வெளிப்பாடுகள் ‘அபாரம்’ என மனத்துள் ஒரு குரலை ஒலிக்கச் செய்யாமலில்லை. |