பாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச்
கவடு பல சமயம் அவற்றை நம் விழிகள் பிரித்தறிகின்றன. அவற்றை விட்டுச் சென்ற
மாமனிதர்களைக் காண்கிறோம். அவர்களின் முகங்கள் அளவுக்கே துல்லியமானவை
காலடிச்சுவடுகள். சந்திக்க நேர்ந்த பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய
நினைவுக்குறிப்புகள் இவை. உதிரி நினைவுகளாக இல்லாமல் புனைவெழுத்தாளனின்
மொழியாளுமையுடன் கதைபோல சித்திரிக்கப்பட்டவை. ஆகவேதான் நெகிழ்வும்
எழுச்சியும் அளிக்கும் தருணங்களால் ஆனவையாக உள்ளன இவை.வரலாற்றை மனிதர்களாக்க காணும் அரிய அனுபவத்தை அளிப்பவை இப்படைப்புகள். |