ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல். |