Description |
|
டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் 1979ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு மேற்படிப்பையும் முடித்தவர், அவர், தன் 8 ஆண்டுகள் மருத்துவப் படிப்பில் கற்றுத் தேர்ந்தது என்னவெனில், ஆங்கில மருத்துவம் எந்தவொரு நோய்க்கும் மருத்துவம் புரிய தகுதியற்றது. இந்த , மருத்துவத்தின் பக்கவிளைவுகள் ஒவ்வொரு சாதாரண நோயையும் உடலினுள்ளேயே அழுத்தி,வாழ்நாள் முழுமையிலும் அந்த நோயின் வீரியத்தை வளரச் செய்து, அதன் விளைவாக பல பாகங்களிலும், பல் உறுப்புக்களிலும் தீய விளைவுகளை , உருவாக்கக் கூடியது.இந்த உண்மையை கண்கூடாக தன் ஆறு வருட மருத்துவத் தொழிலில் கண்டதன் விளைவாக அதனைக் கைவிட்டு அகுபங்சர் மருத்துவம் 1984ல் ஆரம்பித்தார். அப்போது அகுபங்சர் மருத்துவம் சாதாரண தலைவலி, உடல் வலி , போன்ற ஒருசில உபாதைகளுக்கு மட்டுமே உதவும் என்ற அளவில்தான் இருந்தது. இந்த நிலையிலிருந்த அகுபங்சர் மருத்துவத்தை மனித சமுதாயமே வியக்கக் கூடிய அளவுக்கு ஒரு மனிதனின் அனைத்து நோய்களுக்கும் நொடிப் பொழுதில் , ஒரேயொரு ஊசி முனையின் தொடுதலைக் கொண்டு சுகமளிக்க முடியும் என்ற , மாபெரும் அத்தாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அகுபங்சரில் மட்டுமல்ல, மருத்துவ உலகிலேயே மிகப்பெரும் புரட்சியாக அமைந்தது. 1997ம் ஆண்டு முடிய 14 ஆண்டுகள் அகுபங்சர் மருத்துவம் இவ்விதத்தில் உலக அளவில் பிரபலமாகியது. இந்த 14 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் , ஆயுர்வேதம், சித்தா, மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம், மற்றும் ஹோமியோபதி போன்ற அனைத்து மருத்துவங்களும் இந்த காலகட்டத்தில், புத்துயிரும், மறுவாழ்வும் பெற்றன. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம்பேரதிர்ச்சிக்குள்ளாகியது. ஒவ்வொரு ஆங்கில மருத்துவரும் அகுபங்சர் பட்டத்தை தங்கள் எம்.பி.பி.எஸ், எம்.டி பட்டங்களுடன் இணைத்துக் கொள்ளாவிட்டால் , பிழைக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். |