Description |
டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் 1979ம் வருடம் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு மேற்படிப்பையும் முத்தம் அவர் தன் எட்டு ஆண்டுகள் மருத்துவப் படிப்பில் கற்றுத் தேர்ந்து என்னவெனில், ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோய்க்கும் மருத்தும் புரிய தகுதியற்றது; இந்த மருத்துவத்தின் பக்கவிளைவுகள் ஒவ்வொரு சாதார நோயையும் உடலினுள்ளேயே அழுத்தி, வாழ்நாள் முழுமையிலும் அது நோயின் வீரியத்தை வளரச் செய்து அதன் விளைவாக உடலின் பா பாகங்களிலும், பல உறுப்புக்களிலும் தீய விளைவுகளை உருவாக்கக் கூடியதுஇந்த உண்மையை கண்கூடாக தன் ஆறு வருட மருத்துவத் தொழிலில் கண்டதன் விளைவாக, அதனைக் கைவிட்டு, அகுபங்சர் என்ற மருத்துவது தொழிலில் இறங்கினார். தன் சகோதரர் டாக்டர் சித்தீக் ஜமால் அவர்களுடன் இணைந்து அகுபங்சர் மருத்துவம் 1984ல் ஆரம்பித்தார். அப்போது அகுபங்சர் மருத்துவம் சாதாரண தலைவலி, உடல்வலி போன்ற ஒருசில உபாதைகளுக்கு மட்டுமே உதவும் என்ற அளவில்தான் இருந்தது. இந்த நிலையிலிருந்து அகுபங்சர் மருத்துவத்தை, மனித சமுதாயமே வியக்கக்கூடிய அளவுக்கு, ஒரு மனிதனின் அனைத்து நோய்களுக்கும் நொடிப்பொழுதில் ஒரே ஒரு ஊசி முனையின் தொடுதலைக் கொண்டு, சுகமளிக்க முடியும் என்ற மாபெரும் அத்தாட்சியைக் கண்டுபிடித்து. அகுபங்சர் துறையில் மட்டுமல்ல; மருத்து உலகிலேயே பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள் இந்த டாக்டர் சகோதரர்கள்: 1997ம் ஆண்டு முடிய 14 ஆண்டுகள் அகுபங்சர் மருத்துவத்தை உலக அளவில் பிரபலமாக்கியவர்கள் இந்த டாக்டர் சகோதரர்கள். இந்த 14 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் ஆயுர்வேதம், சித்தா, மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம் மற்றும் ஹோமியோபதி போன்ற அனைத்து மருத்துவங்களும், டாக்டர் சகோதரர்களின் துணிச்சலான மருத்துவப் புரட்சியின் போது புத்துயிரும். மறுவாழ்வும் பெற்றன. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம் பேரதிர்ச்சிக் குள்ளாகியது. ஒவ்வொரு ஆங்கில மருத்துவரும் அகுபங்சர் பட்டத்தை தங்கள் எம்.பி.பி.எஸ். எம்.டி. பட்டங்களுடன் இணைத்துக் கொள்ளாவிட்டால் பிழைக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். - ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ் |