Description |
-திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் புனைகதைகளின் தொகுப்பு இது. காட்சிகளைப் படம்பிடிப்பதில் வெளிப்படும் துல்லியமும் நேர்த்தியும் அழகுணர்ச்சியும் மனங்களைப் படம்பிடிக்கும்போதும் வெளிப்படுவதை இந்தக் கதைகளில் உணரலாம். பல விதமான மனிதர்கள் பல விதமான இயல்புகள், எண்ணங்கள், வேதனைகள், பரவசங்கள் ஆகியவற்றை நுண்ணுணர்வுடன் கையாளும் இந்தக் கதைகள் வாசகரின் ஆழ்மனதில் சலனங்களை ஏற்படுத்த வல்லவை. |