Description |
சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்து தமிழின் முதன்மையான இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. மதுரையை, அதன் மாந்தர்களை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அய்யனார் கம்மா (2010), ஒரு வெய்யில் நேரம் (2012), பைத்தியக்காலம் (2017), மதுரைக் கதைகள் (2017), ஆட்டம் (2020), நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன் (2021) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும்... தீக்கடல் (2010), தற்கொலைக்கு முயன்று தோற்றவன் (2013), காமத்தின் மீது பொழியும் மழை (2018), உன்னோடான உரையாடல் (2021) ஆகிய கவிதைத் தொகுப்புகளும்... அலப்பறை (2017), சார்மினார் எக்ஸ்பிரஸ் (2020) ஆகிய நாவல்களும் இதுவரை வெளிவந்துள்ளன. ‘அய்யனார் கம்மா’ என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு, ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது. சமீபத்தில், (2021) Bynge App என்ற புதிய தளத்தில் எழுதிய ‘மிளிர்மன எழில்மதி’ என்ற தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. |