Description |
குத்பாவின் ஊடக மொழி பற்றிய விவாதங்கள் பல வருடங்கள் பழமையானது. நவ யுகத்தின் அறிஞரான மௌலானா மௌதூதி அவர்களிடம் 1937-ல் இது விஷயமாக ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு மௌலானா, ‘தர்ஜுமானுல் குர்ஆன்’ பத்திரிகையின் மூலமாக சந்தேக நிவர்த்தியை நடத்தினார். குத்பாவின் மொழி என்று சொல்லக் கேட்டவுடனேயே அவசரப்பட்டு முன் முடிவுகளை மட்டும் அடைகின்றவர்களுக்கும் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் பிரச்சினைகளின் பொதுவான அம்சங்களை விவாதிக்க விரும்புகின்றவர்களுக்கும் மிகவும் உதவிகரமானதாக இந்நூல் விளங்கும். |