Description |
1. "பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்" நூலில் உள்ள கவிதைகளை எனது முன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் எடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம். 2. இவை தேசியவுடைமையாகும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதே இவற்றை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். 3. வாய்மொழியாகவே ராமாயணமும், மகாபாரதமும் , திருக்குறளும், ஆத்திசூடியும் எல்லோருக்கும் பொதுச் சொத்தாக இருந்து வரும் ஒரு நாட்டில் வாழ்கிறவன் என்ற வகையில் அறிவுப் பகிர்தலைப் பணத்தோடு தொடர்புபடுத்தும் சட்டங்கள் எதுவும் இந்த நூலைக் கட்டுப் படுத்தாது. 4. என் கவிதைகளை மற்றவர்கள் திருடி விடுவார்கள் என்கிற கவலை எனக்கு இல்லை. மற்றவர்களைத் திருடத் தூண்டும் வரிகளை எழுத வேண்டுமென்பதே எனது குறிக்கோள். 5. இத்தொகுதியில் உள்ள எனது கவிதைகள் என் தனியுடைமை அல்ல. இவை பொதுவுடைமை. என் மனைவிக்கோ , மகள்களுக்கோ, பிற வாரிசுதாரர்களுக்கோ இதில் எந்த உரிமையும் இல்லை, இக்கவிதைகளை என் மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன் |