Description |
ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில், எக்கணத்தில் துரோகத்தின் முதற் புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லாத் துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூயக்காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும் ஆம்ரினும் உணர்த்துவார்கள். இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் எனக்குப் பிடித்தது, சேது அண்ணன். அத்தனை சரியான காரணம். ஒரு துரோகத்திற்கு உண்டு என்றாலும், துரோகம் என்பதோர் அமிலம். செய்தவரின் கரங்களையும் பொசுக்கும் திராவகம். |