Description |
வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம் என்பது தமிழக நதிகளின் மரணசாசனம் தான். நமக்கு வாழ்வைத் தந்த நதிகள் இன்று கழிவுகளை சுமக்கும் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளால், வனப்புமிக்க அதன் உடலெங்கும் இடையறாத ரணங்கள். நீரற்ற இந்நதிகளில் எஞ்சிய மணலும் சுரண்டி எடுக்கப்பட்டு பள்ளமாகிப்போன ஆறுகள் இன்று வேதனையோடு கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கின்றன. இரவில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் அனைத்துக்கும் நதிதான் சாட்சியம். மனிதரின் எத்தனைத் தீயசெயல்களை நதி சகித்துக் கொள்வது? நதி மறைந்துபோனது. நதி வளர்த்த மனிதர்கள் நடை பிணமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர், நீரற்ற நிலப்பரப்பில். |