Description |
கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது. சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது. எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும் பூவிதழாகவும் நம்மை ஆசைத்தபடி தெறிக்கின்றன. அகரமுதல்வனின் பிம்பங்கள், சில கவிதைகளுக்கும் என்னால் உடனடியில் நுழைந்து விடமுடிகிறது. கவிதை மௌனத்தின் நொடி அசைவில் திறவுபட வேண்டும். கவிதையில் மொழியில் இறுக்கமும் உறைவும் தந்ததாகவும் இருக்கலாம். சில கவிதைகளின் கதவுகளை இரண்டு மூன்று வாசிப்புகளின் பின் தான் திறக்க முடிகிற அளவு இறுக்கமாக இருக்கிறது. - யமுனா ராஜேந்திரன் |