Description |
குறிப்பிடத்தக்க மிக முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் பா.வெங்கடேசனுடன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடத்திய உரையாடல் இது. பா.வெங்கடேசனின் புனைவாக்கச் செயல்பாடு சார்ந்த அவருடைய தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகள் அல்லாமல் புனைவு வகைமையை மையமிட்டே உரையாடலை அமைத்துக்கொண்டோம். புனைவுக்கு மிக ஆதார அம்சமாக இருக்கும் கற்பனையில் ஆரம்பித்து மொழி, காலம், வெளி, தத்துவம், அரசியல், உணர்வு, அனுபவம், தகவல், தொன்மம், கனவு ஆகியவை புனைவுகளில் தொழிற்படும் விதம் எனப் புனைவின் வெவ்வேறு கூறுகளை இந்தப் புத்தகம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறது. புனைவு வாசிப்பிலும் புனைவாக்கத்திலும் ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு இந்த உரையாடல் சில ஒளிக்கீற்றுகளையேனும் வழங்குமென்றால், குறைந்தபட்சம் சில சந்தேகங்களையேனும் எழுப்புமென்றால், இந்தப் புத்தகம் அது வெளிவருவதன் பயனை அடையும். |