Description |
பிரபஞ்சத்தில் தீராக் காதலையும், கட்டற்ற அன்பையும் நிலைநிறுத்த இடைவிடாது புதியதொரு ஆயுதத்துடன் கொலை செய்து பழகவேண்டும் என்றும், எண்ணற்ற எதிர்க் கொலைகளின் வழியாக மட்டுமே அதை நிலைநிறுத்த முடியும் என்று சொல்வது வினோதமான கருத்தியலாக இருக்கலாம் ஆனால் அதனைக் கவிதையில் வாசிக்கும் போது அழகியலாகத் தோன்றுகிறதே ஏன் என்ற கேள்வி பிரேமின் ஒரு கவிதையை வாசிக்கும் பொழுது எழுந்து மற்றொரு கவிதையில் மறைந்து வேறொரு கேள்வியாக மாறித் தொடர்கிறது. கொலை மறுத்தலும், கொலை வெறுத்தலும் கொலை வேட்டலின் விளைவு என்பதைக் கவித்துவ வடிவில் வாசிப்பதற்கான தளமாக உள்ளவை பிரேமின் கவிதைகள். |