Description |
பேசாப்படக் காலத்தில், அரங்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துகாட்டித் தனது திரைப் பணியைத் தொடங்கிய இந்திய சினிமாவின் முன்னோடி ராஜா ஸாண்டோவின் வாழ்க்கையில் சில பகுதிகளை இந்நூல் பதிவு செய்கின்றது. பம்பாயில் நடிகராகப் புகழ் பெற்று, சில படங்களை இயக்கினார். சென்னை வந்து அதே பாதையைத் தொடர்ந்தார். இவர் சென்னையில் இயக்கிய ஒரு முக்கியமான படம் ‘பேயும் பெண்ணும்’ (1930). ஒலி வந்தபின் ‘வசந்தசேனா’ (1936), ‘ஆராய்ச்சிமணி’ (1942) முதலிய படங்களை இயக்கினார். தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தின் மீது சிறிது வெளிச்சத்தை இந்தப் பதிவுகள் பாய்ச்சுகின்றன. |