Description |
மா மழை போற்றுதும் மா மழை போற்றதும்’ என்கிறது சிலப்பதிகாரம். மா மழையின் மனோகரமான பின்னணியில், ‘மனத்தில் விழுந்துவிட்ட காதலின் நிழலைச் சொற்களாக மாற்றி நிஜமாக்க’ முனைந்திருக்கிறார் சரவணன், இத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் மூலம். நவீன கவிதையில் இருண்மையும் எளிமையும் அதன் பொருளம்சம் சார்ந்தது. சரவணனின் கவிதைகள் நேரடியான அனுபவ - காட்சிச் சித்திரங்களாக அமைந்திருப்பதும்கூட சுவாரஸ்யமான கவிதானுபவம்தான். |