Description |
உலகத்தை மேம்படுத்தும் லட்சியக் கனவுகள் பல சிதைந்துபோனாலும் மீண்டும் மீண்டும் லட்சியக் கனவுகள் துளிர்த்தபடிதான் இருக்கின்றன. பிரச்சினைகள் பிடுங்கித்தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளைக் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஓர் இயக்கத்தின் வாயிலாகவே செயல்படுகிறார்கள். அந்த இயக்கம் அவர்களது கனவு மெய்ப்பட உதவுகிறதா அல்லது புதிய நெருக்கடிகளை உருவாக்குகிறதா? சமூக-சமயத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும் மகாதேவன் தனது அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் அவை சார்ந்த சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்கிறார். |