Description |
இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்தக் கள ஆய்வு நூலின் முதல் பகுதியில், தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பரதவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழக்காறுகள் குறித்த களஆய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்கப் பரதவர்களிடையே வழிபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான் பற்றிய தகவல்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகள் போலவே வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ளமையும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. |