Description |
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி இவரே கி ரா வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றி வரைவைப் படைப்புகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியுமென்பதை இந்நூலின் வழி நிறுவுகிறார்.கி ர வின் ஒட்டுமொத்த படைப்பின் வழி இது சாதிக்கப்படுகிறது. கி.ரா.வின் படைப்புகளைப் பண்பாட்டுப் பனுவல்களாக எடுத்துக்கொண்டு அதில் கூறப்படும் இனத்தின் தாவரங்கள், விலங்குகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், குடும்ப உறவு, விவசாயம், புழங்கு பொருட்களென எல்லாவற்றையும் மீட்டுருவாக்கியிருக்கிறார் பக்தவத்சல பாரதி. - அ.கா. பெருமாள் |