Description |
காட்டுயிர்களைக் காணும் பொருட்டு நான் குளங்களையும் புதர்க்காடுகளையும் நஞ்சை புஞ்சைகளையும் மலைகளையும் நாடிச் சென்றேன்.சொல்லப்போனால் எனது குடும்பத்துடன் செலவழித்ததை விடவும்,அதிகமான நேரத்தை காடுகளிடம்தான் நான் கழித்திருக்கிறேன் என்று சொல்லலாம்.இந்த ஆர்வத்தின் பொருட்டே இயற்கையின் பால் அக்கறை கொண்ட நபர்களை தேடிச் சென்று அளவளாவினேன்.இப்படி பல்வேறு தளங்களில் கிடைத்த அரிய நேரடி அனுபவங்களின் தொகுப்பே”காட்டின் குரல்”என்ற சூழல் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. |