Description |
200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது என்று சூளுரைத்தான்பெருவீரன் திப்பு சுல்தான். வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெடுத்து, மண்ணின் மானம் காத்து, தன் மானம் காக்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இந்தியாவின் பெரு வீரன் இமலாயப் புகழ் திப்பு சுல்தான். இந்திய வரலாற்றிலேயே போர்களத்தில் வீரமரணமடைந்த மன்னன் என்ற பெருமையை பெற்ற திப்புசுல்தான் மீது எத்தனையெத்தனை அவதூறுகள் குற்றச்சாட்டுகள். இவை அனைத்திற்கும் உரிய வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளார் வரலாற்றாய்வாளர் செ. திவான் இந்நூலில். |