Description |
நீரோட்டம் (நாவல்) நீரோட்டம் (நாவல்) இன்றைக்கு சாதியச் சூழல் எவ்வாறு வாழ்க்கையை நார்நாராகக் கிழிக்கிறது என்பதை ஓரளவு தொட்டுக்காட்ட முயல்கிறது இந்நாவல். எத்தனை தடை வந்தாலும் நீரோட்டம் நிற்பதில்லை; அது தொடர்ந்து தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு பயணித்துக் கொண்டேயிருக்கும். வாழ்க்கையும் ஒரு நீரோட்டம் தான். அந்த நீரோட்டம் தற்கால வாழ்விலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதைக் கோடுகாட்ட முயல்வதே இந்நாவலின் நோக்கம். வாழ்க்கைதான் பெகும் ஆசான். அதனிடமிருந்து கற்றவற்றில் சில துளிகள்தான் இதில் பதிவாகியிருக்கிறது. அதன் பெருமணற்பரப்பில் புரண்டதில் உதிரும் சிறுசிறு துகள்களின் சேகரம், அந்த நீரோட்டத்தில் தெறித்த சில துளிகளின் பதிவுகளை இந்த நீரோட்டம் முன் வைக்கிறது. |