Description |
தற்காலத் தமிழ் நாவல்களைக் கதை சொல்லும் நாவல்கள் எனவும், பிரதியாக்கம் செய்யப்பட்ட நாவல்கள் எனவும் இரண்டு விதங்களில் எளிதாக வகைப்படுத்தி விடலாம். கதை சொல்லும் நாவல்களில் வெறும் கதை மட்டுமே இருக்கும். வரிசைக் கிரமத்தில் ஒரு ஊரை முன்வைத்து, கதைத் தலைவனை முன்வைத்து, வரலாற்றை முன்வைத்து, மதத்தையோ சாதியையோ முன்வைத்துக் கொஞ்சம் கதைவிடத் தெரிந்தால் உடனே கதை சொல்லும் நாவலை எளிதாக எழுதிவிடலாம் |