Description |
சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து. |