Description |
மகாத்மா எனப் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியின் வரலாற்றில் கடைசி200நாட்களின் நிகழ்வுகளை நாட்குறிப்பின் பக்கங்களில் பதிவு செய்தது போன்ற நூல். 1947 -ஜூலை15முதல்1948ஜனவரி30-ம் நாள் வரையிலான200நாட்களிலும் ஒரு வினாடியைக் கூடத் தவற விடாமல் தேர்ந்த ஓர் ஒளிப்பதிவாளர் சிறந்த ஒரு காமிராவைக் கொண்டு அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் படமாக்கிய பின் மற்றொரு திறன் மிகுந்த ஒரு படத் தொகுப்பாளர் நேர்த்தியாக எடிட்டிங் செய்து தொகுத்த மிகச்சிறந்த ஓர் ஆவணப்படம் போல் இந்நூல் காட்சித் தொகுப்பாக அமைந்திருக்கிறது.மகாத்மாவின் கடைசி நாட்களில்,மத நல்லிணக்கத்திற்காகப் போராடிய-நாட்டுப் பிரிவினையின்போது இந்து-முஸ்லிம் மதவெறியர்களுக்கு எதிராகத் தன் உயிரையே பணயம் வைத்த நாட்கள் இவை.எந்த அளவிற்குத் துயரமும்,வலியும் நிரம்பியவையாக காந்திஜியின் இந்த200நாட்கள் இருந்தன என்று இவ்வளவு விரிவாகவும்-தெளிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிற நூல்.சமீப நாட்களில் வேறெதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. |