Description |
அது என்ன! இது என்ன; ஏன் இப்படி செய்யவேண்டும், ஏன் அதைச் செய்யக்கூடாது என்று எப்போதும் கேள்வி கணைகளைத் தொடுக்கும் குழந்தை பள்ளி சென்றதும் கப் சிப்! என வாயடைத்து கேள்வி கேட்கும் திறனே இல்லாமல் போய்விடுகிறது. இன்றைய மனன கல்வி முறையின் அடிப்படை பிரச்சனையே இது தான். இந்தத் தொகுப்பில் உள்ள பதினான்கு கரும்பலகைக் கதைகளும் நமக்குப் புதிய பார்வைகளை தருகின்றன. நண்பர் புதுச்சேரி அன்பழகன் எழுதியுள்ள இந்த நூலை கல்வியிலில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தை மனஉலகை அறிய விரும்புபவர்கள் ஆசிரியர்கள், கல்வியியல் ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். |