Description |
ஆந்திரத்தில் மட்டுமல்ல,அகில இந்திய அளவிலும் மதிப்பு மரியாதைகளைப் பெற்ற மகான் புச்சலபள்ளி சுந்தரய்யா.மக்கள் அவரிடம் அன்பும்,மரியாதையும் செலுத்த காரணங்கள் இருந்தன.தேசத்திலும்,சர்வதேச அளவிலும் விஞ்ஞான சோசலிஸத் தலைவராக சுதந்திரப் போராளியாக,உழைக்கும் மக்கள் தலைவராக,அகில இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவராக அவர் அங்கீகாரத்தைப் பெற்றார்.இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கம் முதல் அவரது இறுதிக் காலம் வரை மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)பொதுச்செயலாளராகப் பனிரெண்டாண்டுகள் பணியாற்றிய புகழும் சிறப்பும் பெற்றவர். |