Description |
இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள். ஆண்,பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல், காமம் ஆகிய அனைத்தையும் குழப்பமில்லாத சீரான மொழியில் சொல்லமுடிந்த அவரால் , பொதுவாக சிறுகதைக்கு எடுக்கத் தயங்கும் சவாலான கதைக்கருக்களை மிக அனாசியமாக எழுதிச் செல்கிறார். அவரது அயலக வாழ்க்கை தரும் அனுபவங்களும் அதற்கு கைகொடுத்திருக்கிறது. இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய பெண் எழுத்தாளர் ஒருவரின் வருகையை அறிவித்துள்ளார் தீபா ஸ்ரீதரன் |