Description |
குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவரது எழுத்துகள் குழந்தைகள் உலகிற்கு நல்வரவு. அவருக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும். எளிய மொழி, நிறைய தகவல்கள், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் திருப்பங்கள் இவரது நாவலை குழந்தைகளுக்கானதாக மாற்றிவிடுகிறது. இந்நாவல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும். தொடர்ந்து குழந்தைகளுக்காகவும் எழுதுங்கள். |