Description |
ஜல்லிக்கட்டை ஒழிப்பதன்மூலம், தரமான நாட்டு மாட்டின் உற்பத்தியை ஒழிக்க விரும்புகிறார்கள். அதனை ஒழிப்பதின் மூலம் விவசாயத்தை (உரம், பூச்சிமருந்து மூலம்) ஒடுக்க முயல்கிறார்கள், இந்தச் செயற்கை ரசாயனத்தின் மூலம் கிடைக்கக்கூடிய கொள்ளை லாபத்தையும் அவர்கள் கொண்டு போக விரும்புகிறார்கள். நாட்டு மாடுகளை அழித்து ஒழிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது யாரெனில் ஜெர்மானிய தேசத்துக் கம்பெனிகள். Jercy Corporation, Friesian International இவர்களின் இந்திய ஏஜெண்ட்கள். இவர்கள் மாட்டுக்கறி வியாபாரத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.நாட்டு மாடுகளை இனவிருத்தி செய்யும் காளை மாடுகளை ஒழிப்பதன் மூலம் இவர்கள் சந்தைபலம் பலமடங்கு கூடும். இதற்கடுத்தபடியாக வருவது டிராக்டர் கம்பெனிகள். அவர்கள் உழவு மாடுகளை ஒழிக்க விரும்கிறார்கள். |