Description |
பல்கலைக் கழகம் வரை கல்விப்பட்டம் பெற்றவர் நன்றாக கற்று அறிந்தவர் என எண்ணப்படுகிறார். ஆனால் அவர் கொண்டிருப்பது எல்லாமே வெறும் ஏட்டுக்கல்வியே. அவர் இன்னமும் நடைமுறைச் செயல் பாடுகள் ஏதொன்றிலும் பங்கெடுக்கவில்லை அல்லது தான் கற்றுள்ளவற்றை வாழ்க்கையில் எந்த ஒரு களத்திற்கும் பொருத்தியது இல்லை. அத்தகைய ஒரு நபர் முழுமையாக வளர்ந்த அறிவுஜீவி என பாவிக்கப்பட இயலுமா? எனது கருத்தில் அது அரிதே, ஏனென்றால் அவரின் அறிவு இன்னும் முழுமையடையவில்லை. அப்படியென்றால் ஒப்பீட்டளவில் முழுமையான அறிவு எது? ஒப்பீட்டளவில் முழுமையான அறிவு இரண்டு நிலைகளில் அமைகிறது. இரு கட்டங்களில் உருவாகிறது. முதலாம் கட்டம் புலனறிவுக் (றிமீக்ஷீநீமீஜீtuணீறீ) கட்டம். இரண்டாம் கட்டம் பகுத்தறிவுக் (ஸிணீtவீஷீஸீணீறீ) கட்டம் என்பதாகும். |