Description |
ஜேகே எனும் ஜெயக்குமரன் சந்திரசேகரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார். படலை இணையத்தளத்தில், வெளியாகும் இவருடைய நனவிடை தோய்தல் எழுத்துக்களின் வாயிலாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் ஈழப் போர்ச் சூழலின் வாழ்வு அனுபவத்தை பால்யத்தின் பார்வைக்கூடாக எழுதிய என் கொல்லைப்புறத்துக் காதலிகள் என்ற தொகுப்பும் அரசியல் விஞ்ஞானப் புனைவான கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. இறுக்கமான ஒரு சமூகத்தில் பேணப்படுவதாக நம்பப்படும் விழுமியங்களும் கட்டுப்பாடுகளும் முரண் காரணிகளால் ஒன்றுமில்லாததாக ஆக்கப்படும். காலக்கட்டாயத்தை இத்தொகுப்பில் உள்ள பதினொரு கதைகளும் பேசுகின்றன. |