Description |
“இந்துத்துவ உயர்சாதி பண்பாட்டு அம்சங்களையே இலக்கியமாக்கிக் கொண்டிருந்த தஞ்சைப் படைப்பாளிகளிடமிருந்து மாறுபட்டு, ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தீவிரமாக இலக்கியமாக்கியவர் சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperumal). 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கி இதுவரை நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என இவரது படைப்புப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கீழ்வெண்மணி நிகழ்வை மையமாக வைத்து இவர் எழுதிய ‘செந்நெல்’ நாவல் தமிழின் மிகமுக்கியமான நாவல்களில் ஒன்று. வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் நாவல் (velladukalum sila kodiyadukalum), பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. |